Tuesday, December 30, 2014

இன்றும் தாமதம்....



என்றும்போல் இன்றும் தாமதம்...


பள்ளி முடிந்து எல்லோரையும்
வீட்டுக்கு அனுப்பிவிட்டு
சல்லாத்தாக
சீவல ஐஸ் சாப்பிட்டுவிட்டு
கொசுறு மாங்காய் கீத்தையும்
வாங்கி கொண்டு....

இந்த உலகத்தையே வென்று
வீழ்த்தியது  போல்
ஒரு நிதான நடையில்

இரு சக்கர சைக்கிளையும்
தள்ளிக்கொண்டு..
வரும் வழியில் கிடக்கும்
ஜல்லிக்கல்லைஉதைத்துக்கொண்டு
பொழுது போயி.. விளக்கேற்றிய பின்
 வீடு நுழைந்ததும் கூறும்
முதல் வார்த்தை...

 "அம்மா பசிக்குது......"

_ பாரத் ஜம்புலிங்கம்.

No comments:

Post a Comment